இலங்கையின் கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – பதறிய மீனவர்கள்!!!!

இலங்கையின் பல பகுதிகளில் உள்ள கடற்பகுதிகள் பச்சை நிறமாகியுள்ளமை தொடர்பில் நாரா நிறுவனம் ஆய்வுகளை நடத்தியுள்ளது.கடந்த 31ஆம் திகதி அங்குலான பகுதியை அண்டிய கடல் பகுதியில் பச்சை நிறமாக மாறியுள்ளதாக கடற்றொழில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.பச்சை நிறத்திலான திரவம் ஒன்று கடலில் மிதப்பதாக, கடற்றொழில் அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த மாற்றம் காரணமாக அந்தப் பகுதியில் பிடித்த மீன்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த அறிவிப்பை தொடர்ந்து நாரா நிறுவனம் இது தொடர்பில் பரிசோதனை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

நெவிகியுலா என்ற பெயருடைய டயடம் ஆல்கா வகை ஒன்றே அவ்வாறு கடலில் பரவியுள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளதென நாரா நிறுவன அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அது விஷத்தை ஏற்படுத்தும் ஆல்கா என இதுவரையிலான ஆய்வுகளில் உறுதி செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் நேற்று வரை பல கடல்களில் அவதானிக்க முடிந்துள்ளது.

காலி, களுத்துறை, பயாகல, பேருவளை, சிலாபம் மற்றும் மோதர கடல் பிரதேசங்களில் இந்த நிலைமை காணப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.