248 கிராம் கஞ்சாவுடன் சிக்கிய நபர் – யாழில் சம்பவம்!!!!
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் 248 கிராம் கஞ்சாவுடன் 46 வயதுடைய குருநகரை சேர்ந்த நபர் யாழ் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் யாழ் நகரப் பகுதியில் விற்பனைக்கு தயாராக தனது மோட்டார் சைக்கிளில் கஞ்சாவினை மறைத்து வைத்திருந்த வேளையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை