கிளிநொச்சி விபத்தில் மூவர் படுகாயம் – ஒருவர் அவசரசிகிச்சைப் பிரிவில் !!
கிளிநொச்சியில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இதில் ஒருவர் மேலதிக கிசிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (02) இரவு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக ஏ9 பிரதான வீதியில் பாரவூர்தி மற்றும் உந்துருளி விபத்துக்குள்ளாகியதில் உந்துருளியில் பயணித்தவர் காயமடைந்தார்.
இதேவேளை இன்று (03) காலை கிளிநொச்சி – டிப்போ வீதியில் ரயில் நிலைய கடவைக்கு அருகில் முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி விபத்தில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்தோடு இரு பாடசாலை மாணவர்கள் சிறு காயமுற்றுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை