பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான சட்ட ஆலோசனை – இன்று கிளிநொச்சியில்!!!

பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளும் விழிப்புணர்வு கருத்தமர்வு இன்று கிளிநொச்சியில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த செயலமர்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆர்.பானுஜா தலைமையில் குறித்த கருத்தரங்கும், செயலமர்வு இடம்பெற்றது. குறித்த கெருத்தமர்வில் சட்டத்தரணி சர்மிளா சட்ட ஆலோசனைகளையு்ம, விழிப்புணர்வு கரு்ததுக்களையும் வழங்கியிருந்தார்.

இதன்போது பாலியல் லஞ்சம், பாலியல் சுரண்டல், விவாகரத்து, தாபரிப்பு, வன்முறைகள் தொடர்பான பிரச்சினைகளிற்கு சட்ட ரீதியான ஆலோசனைகள் மற்றும் குற்றங்களிற்கான தண்டனைகள் தொடர்பான விழிப்புணர்வு இடம்பெற்றது.

இதன்போது கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து பெண்கள், இளைஞர்கள் என 150 பேர்வரை பங்கு கொண்டு பயன் பெற்றனர். இதன்புாது பெண்களிற்கான ஆளுமை மற்றம் திறண் விருத்திக்கான செயன்முறைப் பயிற்சிகளும் இடம்பெற்றிருந்தமை தொடர்பிலலும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆர்.பானுஜா தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.