ஆணின் சடலம் மீட்பு!
பதுளை – தெமோதரை சௌதம் தோட்டம் மேற்பிரிவில் அமைந்துள்ள குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (06) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
சௌதம் தோட்டம் மேற்பிரிவில் (5ம் கட்டை) அமைந்துள்ள குளத்தில் சடலம் மிதப்பதை கண்டு பிரதேச மக்களால் பொலிசாருக்கு தெரியபடுத்தியதையடுத்து சடலம் எல்ல பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
பெரியம்மன்பெரியான் (74-வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை