வீதி விபத்தில் பெண் ஒருவர் பலி – சங்குப்பிட்டிப்பாலத்தில் சம்பவம்!!!

சங்குப்பிட்டி வீதியில் டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (06) முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றது.

உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லை. ஒரு காலையிழந்த அவருக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி திசையிலிருந்து பூநகரி திசைக்குப் பயணித்த மோட்டார் சைக்கிளும் எதிர்த் திசையில் வந்த டிப்பருமே மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றது என்று அங்கிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.