பயங்கரவாதச் செயலுடன் தொடர்புடையவர்கள் இனிமேல் தங்காலை பழைய சிறையில் அடைப்பு!!!

பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பாகக் கைதுசெய்யப்படுபவர்களைத் தடுத்து வைக்கும் நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலையைப் பயன்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக) ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 15 ஆவது சரத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாக, அந்தச் சரத்தில் கூறப்பட்டுள்ள பணிகளுக்காக தங்காலை பழைய சிறைச்சாலையை பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களைத் தடுத்து வைக்கும் இடமாக அறிவிப்பதாக பாதுகாப்பு செயலாளர் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.