விடைபெறும் மஹிந்த; பிரதமராகிறார் பஸில். – தென்னிலங்கை ஊடகங்கள் பரபரப்புச் செய்தி!!!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்னும் ஈராண்டுகளில் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளார் என்று தெரியவருகின்றது எனத் தென்னிலங்கை ஊடகங்கள் இன்று பரபரப்புச் செய்தியை வெளியிட்டுள்ளன.

இதன்படி ஐந்தாண்டுகளும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கமாட்டார் எனவும், அவர் பதவி விலகிய பின்னர் அவரின் சகோதரர் பஸில் ராஜபக்சவுக்குப் பிரதமர் பதவி வழங்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் ஊடாக, இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. எனினும், 20 நிறைவேறிய கையோடு பஸில் நாடாளுமன்றம் வரமாட்டார் எனவும், மஹிந்தவின் ஓய்வின் பின்னரே அவர் வருவார் எனவும் தெரியவருகின்றது.

ராஜபக்ச சகோதரர் ஒருவருக்கே பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதால் அது பெரும்பாலும் பஸிலுக்கே வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கைக்கான வரையறை நீக்கப்பட்டாலும், புதிதாக எவருக்கும் நியமனங்களை வழங்காதிருக்க ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தீர்மானித்துள்ளனர் எனவும் அறியமுடிகின்றது” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.