திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்நூறு கிராம் கேரளா கஞ்சாவுடன் கிளிநொச்சியிலுள்ள பெண்ணொருவர் கைது!!

எப்.முபாரக்  2020-09-08.

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்நூறு கிராம் கேரளா கஞ்சாவுடன் கிளிநொச்சியிலுள்ள பெண்ணொருவரை நேற்றிரவு(7) கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவரே திருகோணமலை பேருந்து  நிலையத்தில் வைத்து கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரான கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த பெண் யாழ்ப்பாண பஸ்ஸில் திருகோணமலைக்குச் சென்று திருகோணமலை பேருந்து நிலையத்தில் ஐந்நூறு கிராம் கேரளா கஞ்சாவை மற்றொருவருக்கு கைமாற்றுவதற்காக வைத்திருந்த நிலையில் திருகோணமலை தலைமையக போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கஞ்சாவுடன் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரான பெண்ணை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.