20 இற்கு எதிராக இன்று முதல் போராடுகின்றது சஜித் அணி!!! (photo)

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் 20 ஆவது அரசமைப்பு திருத்த யோசனைக்கு எதிராக, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்று முதல் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசில் 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவர முன்னணியில் நின்ற, காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரரின் நினைவுத் தூபிக்கு முன்னால் இருந்து போராட்டத்தை அவர்கள் ஆரம்பிக்கவுள்ளனர்.

நேற்று சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் 20 ஆவது திருத்தத்தை எதிர்க்கும் போராட்டங்களை நடத்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.