மரண தண்டனைக் கைதி பிரேமலால் இன்று எம்.பியாக சத்தியப்பிரமாணம் – சபையில் எதிரணியினர் போர்க்கொடி (photos)
மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதன்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கழுத்தில் கறுப்புப் பட்டிகளை அணிந்துகொண்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினருக்கிடையே கடும் வாக்குவாதங்களும் ஏற்பட்டன.
அரசமைப்புக்கமைய மரண தண்டனைக் கைதியொருவர் எம்.பியாக பதவியேற்க முடியாது என்று எதிரணியினர் கோஷம் இட்டனர்.
ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்தே அவருக்கு எம்.பியாகப் பதவியேற்க அனுமதியளிக்கப்பட்டது எனச் சபாநாயகர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அவர் எம்.பியாகப் பதவியேற்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
கருத்துக்களேதுமில்லை