18,900 போதை மாத்திரைகளுடன் மூவர் மோதறையில் சிக்கினார்கள்!!!

மோதறையில் 18 ஆயிரத்து 900 போதை மாத்திரைகள் கொண்ட 189 பெட்டிகளுடன் மூவர், மோதறைப்  பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மோதறைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று மாலை மோதறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம வீதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி போதை மாத்திரைகளை சிறிய லொறியொன்றில் கொண்டு சென்றபோதே, இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரத்மலானை, தெரணியகல, வெல்லம்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மோதறைப் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.