வாழைச்சேனையில் டெங்குவை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம்!!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பெருகி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த வாழைச்சேனை பொலிஸார், பிரதேச சபைகள், வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஆகியவை இணைந்து இவ் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

அந்தவகையில், வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கொழிப்பு நடவடிக்கைகள் திங்கட்கிழமை (07) முன்னெடுக்கப்பட்டது.

வீடு வீடாகச் சென்ற டெங்கொழிப்புக் குழுவினர் தென்னம் குறும்பை, யோகட் கப், வெற்று போத்தல்கள், வெற்று டயர்கள், பொலிதீன் கழிவுகள் போன்ற கழிவுகளை முறையாக அகற்ற வேண்டுமெனவும், பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.