பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் ஹட்டன் – கொழும்பு, மற்றும் ஹட்டன் – கண்டி ஊடான போக்குவரத்து தடைபட்டது

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கரோலினா பகுதியில் (10.09.2020) அன்று அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அட்டன் – கொழும்பு, மற்றும் அட்டன் – கண்டி ஊடான போக்குவரத்து தடைபட்டது.

இதனையடுத்து வட்டவளை பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் சுமார் 30 நிமிடத்திற்கும் மேல், போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் கொழும்பு, அட்டன், கண்டி வைத்தியசாலைக்களுக்கு சென்ற நோயாளர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

அத்தோடு மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக தொலைபேசி கம்பங்கள் மற்றும் மின்சார கம்பங்களும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.