மத்திய கிழக்கிலிருந்து மேலும் 664 பேர் இன்று நாடு திரும்பினர்!!!

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களில் மேலும் 664 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களை வந்தடைந்துள்ளனர்.

கட்டாரின் டோஹாவிலிருந்து 81 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயிலிருந்து 293 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அத்தோடு, சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலிருந்து 290 பேர் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.