இளைஞர் படையுடன் குருந்தூர் மலைக்கு விரைந்தார் ரவிகரன்!!!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள, தமிழர்களின் பூரவீக குருந்தூர் மலை ஐயன் கோவிலில் நிறுவப்பட்டிருந்த திரிசூலம் அண்மையில் விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அப் பகுதி மக்களால் இதுதொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் 10.09.2020 இன்றைய நாள், குமுழமுனைப் பகுதி இளைஞர்கள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோருடன், குருந்தூர் மலைக்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார்.

மேலும் இவ்வாறு திரிசூலம் உடைக்கப்பட்டதற்கு அவர், தனது கடுமையான கண்டனத்தினையும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.