யாழ் மாநகர சபை முதல்வர் தலைமையில் வர்த்தக சங்கத்துடன் விசேட கலந்துரையாடல்!!

யாழ் மாநகர சபை முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் யாழ் வணிகர் கழகத்திற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று கடந்த (9) யாழ் மாநகர சபையில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ் மாநகரசபை எல்லைக்குற்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பொலித்தீன் பாவனையை தடை செய்தல் மற்றும் விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள மாநகர கடைகளின் புதிய வாடகை மதிப்பீடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் யாழ் நகர் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் யாழ் நகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் வர்த்தக சங்கத்துடன் இணைந்து கள விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் மற்றும் பொலித்தீன் தடை தொடர்பில் உணவக உரிமையாளர்களுடன் சந்திப்பு ஒன்றை வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்யும் என்றும் அதில் கலந்து கொண்டு குறித்த தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்குமாறும் வர்த்தக சங்கத்தால் இரு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

குறித்த இரு விடயங்கள் தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்துவதாக முதல்வர் குறிப்பிட்டார்.

இக் கலந்துரையாடலில் யாழ் மாநகர பிரதி முதல்வர், யாழ் மாநகர ஆணையாளர், செயலாளர், பிரதம கணக்காளர், துறை சார் அதிகாரிகள், யாழ் வணிகர் கழக தலைவர் திரு.ஆர் ஜெயசேகரம் அவர்கள் மற்றும் வணிகர் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.