மகாகவி பாரதியாரின் நினைவு 99 ஆவது நினைவு தினத்தில் முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு!

யாழ் இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் துணைத்தூதுவர் உயர்திரு எஸ். பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் மகாகவி பாரதியாரின் 99 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதியில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தலுடன் இன்று (11) நடைபெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து கொண்டு மகாகவி பாரதியாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் இந் நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ த.சித்தார்த்தன் அவர்கள், வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் அவர்கள், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ப. கஜதீபன், கௌரவ அனந்தி சசிதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உயர்திரு. எல். இளங்கோவன் அவர்கள், யாழ் இந்தியத் துணைத் தூதுவராலய அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.