ராஜித மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைப் பிரிவின் முன்னிலையில்!!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த ஆணைக்குழுவின் அழைப்புக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல்  அவ்வாணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.