வீதி புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் jaffnaமுதல்வர் பங்கேற்பு!

2020 ஆம் ஆண்டுக்கான வட்டார நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாநகரசபை 2ஆம் வட்டாரத்திற்குற்பட்ட பிறவுண் வீதி 5ஆம் ஒழுங்கை மற்றும் பிறவுண் வீதி மிருக வைத்தியசாலை ஒழுங்கை ஆகிய இரு உப வீதிகள் புனரமைப்பிற்காக மாநகரசபை உறுப்பினர் கௌரவ ப.தர்சானந்த் அவர்களின் முன்மொழிவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த வீதிகள் புனரமைப்பிற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாநகரசபை உறுப்பினர் கௌரவ ப.தர்சானந்த் அவர்களின் தலைமையில் நேற்று (11) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், அடிக்கல்லையும் நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இந் நிகழ்வில் யாழ் மாநகர பிரதி முதல்வர் கௌரவ து.ஈசன், மாநகரசபை உறுப்பினர் கௌரவ நளினா அவர்கள், அப்பகுதி கிராம சேவையாளர், குறித்த வீதியில் வசிக்கும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.