ஐ.தே.க. தலைமையை ஏற்க மங்கள தயாரா?

“ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு யாராவது கேட்டால் இது தொடர்பாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றே நான் பதிலளிப்பேன்.”

– இவ்வாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

தான் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் என்றும், இது எதிர்காலத்திலும் மாறாமல் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நான் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருந்ததால்தான் ஐக்கிய மக்கள் சத்தியிலிருந்து விலகினேன். ரணில் விக்கிரமசிங்க ஒரு சிறந்த தலைவர் என்றாலும், அவர் இலங்கைக்குக் கிடைக்காத சிறந்த தலைவர்” – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.