ரூபா 15 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது – பணம் மற்றும் இரு வாகனங்கள் மீட்பு (photo)

புத்தளம் நகரில் 15 இலட்சம் பொறுமதியான ஹெராயின் போதைப்பொருள் மற்றும் ஒருதொகை பணம் என்பவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று சனிக்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்று அதிகாலை புத்தளம் நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

புத்தளம் தில்லையடி பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 75 கிராம ஹெராயின் போதைப்பொருள் மற்றும் ஹெராயின் விற்பனை செய்யப்பட்ட 2 இலட்சத்து 62 ஆயிரம் ரூபா பணமும், வாடகைக்கு பெறப்பட்ட கார் உட்பட இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.