மத்திய கிழக்கிலிருந்து மேலும் 405 பேர் இன்று நாடு திரும்பினர்.
மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்புக்காக சென்றிருந்த இலங்கையர்கள் 405 பேர் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 341 பேரும், கட்டாரிலிருந்து 64 பேரும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவரும் விமான நிலையத்தில், பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை