‘யானை’யின் புதிய தலைவர் யார் என நாளை இறுதி முடிவு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது தொடர்பில் இறுதி முடிவு இன்று திங்கட்கிழமை எட்டப்படவுள்ளது என சிறிகொத்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்காகக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது தலைமைத்துவப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு கரு ஜயசூரிய, வஜிர அபேவர்தன மற்றும் ருவான் விஜேவர்தன ஆகிய மூவரில் ஒருவர் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்படவுள்ளார் எனவும் மேற்படி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பொதுத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர், ஐ.தே.க. தலைமைப் பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் 74ஆவது ஆண்டு நிறைவு விழாவன்று புதிய தலைவரைப் பெயரிடுவதற்குத் திட்டமிட்டிருந்தார். எனினும், கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஒருமித்த நிலைப்பாடு காணப்படாததால் அது ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், தற்போது மூவர் மாத்திரமே போட்டியில் முன்னிலையில் இருக்கின்றனர் எனவும், இவர்களில் ஒருவரைத்  தலைவராக நியமிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.