கிளிநொச்சியில் மின்சாரம் இல்லாது 700க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் தமது பதிவுகளை மெற்கொண்டுள்ளனர்.
தற்போது இலங்கை மின்சார சபையினால் இலவச இணைப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் புதிதாக மின் இணைப்பினைப் பெறுபவர்கள் இணைப்புக் கட்டணமாக ரூபா 20650.00 இனை செலுத்த வேண்டும் இவற்றை செலுத்தி மின் இணைப்பை பெற முடியாமல் பல குடும்பங்கள் கிளிநொச்சியில் வசித்து வருகின்ற நிலையிலையே இன்று இப் பதிவுகள் எடுக்கப்பட்டுள்ளது
இவர்களுக்கான மின் இனைப்புக்கள் பெண் தலமைத்துவ குடும்பங்கள் , பாடசாலை மாணவர்கள் உள்ள குடும்பங்கள் ,மாற்றுத்திரனாளிகள் உள்ள குடும்பங்கள், என தர வரிசைப்படுத்தப்பட்டு தர வரிசையின் அடிப்படையில் கட்டம் கட்டமாக மின்சாரம் வழங்கப்பட உள்ளது
இவ் மின்சாரம் பெறுபவர்கள் இலங்கை மின்சார சபையில் தமது பதிவுகளை வழங்கி அனைத்து ஆவனங்களும் சமர்பிக்கப்பட்ட நிலையில் உள்ள குடும்பங்களுக்கு இணைப்பிற்கான பணத்தினை இலவசமாக பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராஜா தனது சொந்த நிதியில் இருந்தும் புலம்பெயர் தமிழ்த் தொண்டர் நிறுவனங்களின் நிதி உதவியிலும் செய்வதற்கான பதிவுகளே இன்று மேற்கொள்ளப்பட்டுளது இன்றைய தினம் பதிவுகளை மெற்கொண்ட வர்களில் தரவரிசைப் படி இலவசமாக அவர்களுக்கான இணைப்புப் பணத்தினை செலுத்தும் செயற்திட்டம் மட்டுமே இதற்கான இனைப்பினை மின்சார சபையே வழங்கும்
கருத்துக்களேதுமில்லை