தடையுத்தரவு – தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது!!!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலக த்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலும் தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது  என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது

தியாகி திலீபனின் நினைவு  நிகழ்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நிகழ்வுகளை நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதேபோன்று இன்று(16-09-2020) கிளிநொச்சி அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  சென்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களிடம் நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளார் .
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1304 /20 என்ற வழக்கின் பிரகாரம் 15 9 2020 தொடக்கம் 28.09.2020  வரையான நாட்களில் எந்தவிதமான அஞ்சலி நிகழ்வையும் அல்லது ஊர்வலங்கள் கூட்டங்கள் எதனையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது மேற்படி கட்டளையை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஜீவகஸ்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்டளையை இன்று பகல் 11 30 மணியளவில் வழங்கியுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.