கல்முனை பிராந்திய முச்சக்கரவண்டிகளை பதிவு செய்து புதிய பதிவு இலக்கம் வழங்கும் நடவடிக்கை!!!
குறித்த நடவடிக்கை கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ஜெயசுந்தர வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்தவின் ஆலோசனையின் பிரகாரம் பொலிஸ் நிலைய உள்ளக மைதானத்தில் இன்று இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக பொலிஸ் திணைக்களத்தின் அறிவித்தலின்படி பாவனையில் உள்ள முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதுடன் புதிய பதிவு இலக்கம் வழங்கப்பட்டு அடிப்படை பதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
குறித்த செயற்திட்டத்தின் முதல்கட்டமாக கல்முனை நகர் பகுதிகளில் தொழில் ரீதியாக பாவனையில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பதிவு இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் உள்ள முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட இருப்பதுடன் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்களும் திரட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை