மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 355 பேர் சிக்கினர்.!

மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 355 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுக் காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 208 பேரும், சட்ட விரோத மதுபானத்தை வைத்திருந்த 106 பேரும், வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக 41 பேரும் கைதாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.