அம்பாறை மாவட்ட செயலகத்தில் கொவிட் -19 வைரஸ் பரவல் தொடர்பில் ஆராய்வு!!!

கொவிட் -19 உள்ளிட்ட தொற்று நோய்களை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பில் விழிப்புணர்வு  கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று(5) மாலை  இடம்பெற்றது.

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் காரணமாக அசாதாரண நிலைமை ஏற்பட்டிருந்த நிலையில் இதனை கட்டுப்படுத்துவதற்காக அம்பாறை மாவட்டத்தில் உள்ள  பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்குட்பட்ட   சுகாதார வைத்திய அதிகாரிகள் ஏனைய திணைக்கள தலைவர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகள் இராணுவத்தினர்     ஒன்றிணைத்து   எவ்வாறு எதிர்கொள்வது என ஆலோசனைகள் இடம்பெற்றன.

இக்கூட்டமானது இந்த விடயம்  தொடர்பான நிகழ்வு அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமயில் இடம்பெற்றுள்ளதுடன்  இந்நிகழ்வில்  அம்பாறை மேலதிக மாவட்டச் செயலாளர் வீ.ஜெகதீஸன் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன்   பிரதேச செயலாளர்கள் வைத்திய அதிகாரிகள்  மதத்தலைவர்கள்  உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன்  தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன் போது அரசாங்க சுகாதார  நடைமுறைகளை  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட  பகுதிகளில் அமுல்படுத்தி  கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களை எவ்வாறு கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.