அக்கரைப்பற்று 7/4 ஆம் பிரிவில் உள்ள வீடொன்றிலிருந்து 65 பவுண் நகை மற்றும் 110000 ரூபா பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்ட அக்கரைப்பற்று 7இன் கீழ் 4 ஆம் பிரிவில் செல்வாராசா வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து 65 பவுண் நகை மற்றும் 110000 ரூபா பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் இன்று அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளது.

வீட்டின் முன் ஜன்னலொன்றினூடாக உள்நுழைந்த திருடர்களே இக்கொள்ளையினை புரிந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

இக்கொள்ளை தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசாரிடம் வீட்டின் உரிமையாளர்கள் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ள நிலையி;ல் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளரின் மனiவி இவ்வாறு கூறினார்.

வழக்கம்போல இரவு 11 மணிக்கு பிற்பாடு தூக்கத்திற்கு செல்லும்போது நான் அணந்திருந்த நகைகள் உட்பட அனைத்தையும் பை ஒன்றிலிட்டு தலையணைக்கு கீழே வைத்து தூங்கி விட்டேன். இதன் பின்னர் முன் ஜன்னலை திறந்த திருடன் ஜன்னலில் இடப்பட்டிருந்த இரும்பு பாதுகாப்பு கிறிலையும் கழற்றி கீழே வைத்து விட்டு முன் அறைக்குள் நுழைந்துள்ளான்.

பின் அறையில் இருந்த அலுமாரியை திறந்து அங்கிருந்த சிறிய நகைகள் அடங்கிய பையினையும் எடுத்த பின்னர் நான் தூங்கிய அறைக்குள் நுழைந்து எனது தலையணைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த நகைப்பையினையும் பணத்தையும் கொள்ளையிட்டு வீட்டின் பின்வழி கதவின் ஊடாக வெளியேறியுள்ளான்.

அதிகாலை 3 மணியளவில் விழித்துக்கொண்ட பின்னரே இதனை நான் உணர்ந்தேன். உடனடியாக 119 அவசர அழைப்பு பொலிசாருக்கும் அக்கரைப்பற்று பொலிசாருக்கும் தகவலை வழங்கினேன். பின்னர் அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்தேன்.

இந்நிலையில் பொலிசார் இன்று நண்பகல வருகை தந்து விசாரணையை ஆரம்பித்தனர் எனவும் குறிப்பிட்டார்.

இதேநேரம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரும் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண கல்லூரி வீதியிலும் இதுபோன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.