வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களிற்கான மீதிப்பணம் வழங்கும் செயற்பாடு நாளை ஆரம்பம்.

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி கடந்தமாதம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த மாதம் 14ம் திகதி யாழ் வருகை தந்த வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவையும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதனையும் குறித்த பகுதிக்கு சென்று, விடயங்களை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டு மக்களை நேரில் சந்தித்த இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த மற்றும் அங்கஜன் இராமநாதன் அவர்கள் வீட்டுத்திட்டத்தின் மீதி பணம் விரைவில் பெற்றுத்தரப்படும் என அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக அப் பகுதி வீட்டுத்திட்டங்களுக்கான மீதிப்பணம் வழங்கும் செயற்திட்டம் கட்டம் கட்டமாக நாளை (06) ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பணம் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஒழுங்கமைப்பில்  யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினருமான சதாசிவம் இராமநாதன் அவர்களால் வசந்தபுரம் நாவாந்துறை அண்ணா சனசமூக நிலையத்தில் காலை 9.30 மணிக்கு வழங்கப்படவுள்ளது. வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்களை பொறுத்து நிதி தொகை கட்டம் கட்டமாக வழங்கப்படும்.

பொம்மைவெளி பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், தமக்கான வீடமைப்பு திட்டத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அந்த பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவனொருவன் ‘மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டி தரமாட்டிங்களா?”” என்ற பதாகையொன்றை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.
இந்த புகைப்படத்தை பார்வையிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குறித்த பிரச்சினை தொடர்பில் உடனடியாக ஆராயப்பட்டு கிராமிய வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக்க அநுருத்த அவர்களும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதனும் இணைந்து அப்பகுதி மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு எட்ட வழிவகை செய்யப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.