மட்டக்களப்பு காத்தான்குடி மட்டு வாவியில் ஆணின் சடலம் மீட்பு!!!(photo)

மட்டு வாவியில் ஆணின் சடலம் மீட்பு மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி டச்பார் இக்னேசியஸ் விளையாட்டுக்கழக மைதானத்திற்கு அருகிலுள்ள மட்டக்களப்பு வாவியிலிருந்து ஆநொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (06) காலை குறித்த சடலம் பொதுமக்களினால் தகவல் வழங்கியதனைத் தொடர்ந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கல்லடி டச்பார் பகுதியில் வசித்துவந்த 28 வயதையுடைய ஆனொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணமுடிந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

நேற்றைய தினம் கல்லடி பாலத்திற்கு அருகாமையில் சடலமொன்று மிதப்பதை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸார் சடலத்தை தேடிவந்த நிலையில் இன்று சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.