சமூகத் தொற்று அபாயத்தையடுத்து கிளிநொச்சி மாவட்ட சகல பாடசாலைகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடல்!

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் 72 வயதுடைய வயோதிபர் ஒருவருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சுகாதாரத் துறையின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தகரான குறித்த வயோதிபருக்குக் கொரோனா எப்படி தொற்றியது எனச் சுகாதாரத்துறையினரால் கண்டறியப்படாத நிலையில், சமூகத் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் காரணமாகவே பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.