யாழ்ப்பாணத்தில் 245 மி.மீ. மழை – வளிமண்டலவியல் திணைக்களம்
புரெவி சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கிட்டத்தட்ட 245 மி.மீ. மழை பதிவாகியுள்ளது மற்றும் வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் 200 மி.மீக்கு மேல் பலத்த மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை விஞ்ஞான திணைக்களத்தின் அதிகாரி சிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சூறாவளி மேற்கு – வடக்கு-மேற்கு நோக்கி நகரும் என்றும், பகல் நேரத்தில் மன்னார் வளைகுடாவிற்குச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, புயலின் தாக்கம் பகலில் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை