கிழக்கு ஆளுனர் ரஷ்ய மற்றும் பிரான்ஸ் தூதுவர்களுக்கிடையே விசேட சந்திப்பு !
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் இலங்கை நாட்டுக்கான பிரான்சின் தூதுவர் (திரு. எரிக் லாவெர்டு) மற்றும் இலங்கை நாட்டுக்கான ரஷ்யாவின் தூதுவர் (திரு. யூரி மெட்டேரி) ஆகியோருக்கு இடையேயான சந்திப்பொன்று திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் புதன்கிழமை (02) இடம் பெற்றது.
அந்த நாடுகளுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் பல சிறப்பு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், அவர்கள் மாகாணத்தில் கல்வி, மீன்வள மற்றும் விவசாயத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பார்கள் போன்ற பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை