வேலையில்லாப் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு உறுதி! நாடாளுமன்றில் அமைச்சர் நாமல் திட்டவட்டம்

இளைஞர், யுவதிகள் எதிர்நோக்கும் வேலையில்லாப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்காக விசேட வேலைத்திட்டங்களை அரசு வகுத்துள்ளது.”

– இவ்வாறு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் 4.4 மில்லியன் பேர் வரையிலானோர் வேலையில்லாப் பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். அவர்களில் 8 இலட்சத்துக்கும் அதிகமானோர் இளைஞர், யுவதிகளாவர்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களைப் போன்று தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்காது நிரந்தர வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கே அரசு நடவடிக்கை எடுக்கும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.