யாழ்.மாவட்டத்தில் இதுவரை 21884 குடும்பங்களை சேர்ந்த 72410 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் -அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜா

யாழ்.மாவட்டத்தில் தற்போதுவரை 21884 குடும்பங்களை சேர்ந்த 72410 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதுவரை இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை 6 நபர்கள் காயமடைந்துள்ளதாக ரீ.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 42 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 116 குடும்பங்களை சேர்ந்த 3849 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 66 வீடுகள் முழுமையாகவும், 2888 வீடுகள் பகுதி அளவிலும்சேதமடைந்துளதாகவும் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.