மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு…

கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை. நாசிவன்தீவு, மயிலங்கரச்சி பிரதேசங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மேற்படி பிரதேசங்களில் பின்தங்கியதும், வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டது.

வாழைச்சேனையைப் பிறப்பிடமாகவும், கனடா நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற தம்பாப்பிள்ளை சிவலிங்கம் அவர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தாரால் மேற்படி உதவி வழங்கி வைக்கப்பட்டது. அன்னாரின் குடும்பம் சார்பாக மட்டக்களப்பு கெயார் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் தா.தங்கவேல் இந்நிகழ்வில் கலந்து கொண்டு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.