முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் நாளுக்கு நாள் பறிபோகும் நிலை…

எப்.முபாரக்.
முஸ்லிம்களின்  அடிப்படை உரிமைகள் நாளுக்கு நாள்  பறிபோகும் நிலையில் காபட் வீதிகளுக்கும்,அபிவிருத்திகளுக்கும் பாராளுமன்றில் முஸ்லிம் தலைவர்கள்  இருக்கின்றார்கள் என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தேசியத் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவிப்பு.
முஸ்லிம்களின்  அடிப்படை உரிமைகள் நாளுக்கு நாள்  பறிபோகும் நிலையில் காபட் வீதிகளுக்கும்,அபிவிருத்திகளுக்கும் பாராளுமன்றில் முஸ்லிம் தலைவர்கள்  இருக்கின்றார்கள் என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தேசியத் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.
தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் கட்சி காரியாலயத்தில் வைத்து  திங்கட்கிழமை (7)மாலை  ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்:
நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகள் நாளுக்கு நாள் மறுக்கப்பட்டு வருகின்றனா,தொழமுடியவில்லை,ஜனாஸாவை அடக்க முடியாது,மத்தரஸாக்கள் நடத்த இயலாது இவ்வாரான முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை கூட செய்ய முடியாதாத நிலையிலுள்ளது.
இவ்வாறு இருக்கும் நிலையில் காபட் வீதிகளுக்கும்,அபிவிருத்திகளுக்கும் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறிகொடுத்து இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு கையை உயர்த்தியுள்ளார்கள் இவர்களின் நிலைப்பாட்டினை வாக்களித்த மக்களிடம் தெளிவுபடுத்த கூட முடியாத நிலையில் உள்ளார்கள்.
ஆகவே இவர்களைப் பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராகா இருந்த அலிஸாஹிர் மௌலானா அவர்களின் இறுதிக் கடிதத்திலே தெள்ளத் தெளிவாக எழுதியிருக்கார் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.