“எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்”புரவி” வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட குடும்பங்குகளுக்கு உலர் உணவுப் பொதிக வழங்கிவைப்பு !

திரு.சிவலிங்கம் புஸ்பமலர் குடும்பத்தினரின் அனுசரணையுடன், கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி இணைந்து, நேற்று (09-12-2020) கொடிகாமம் இராமாகோலடி, மட்டுவில் மகாவித்தியாலயம் மற்றும் கச்சாய் சாவகச்சேரியில் “புரவி” வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட 150 குடும்பத்தினருக்கு உலர் உணவு மற்றும் உணவுப் பொதிகளை வழங்கி வைக்கப்பட்டது .
“எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்”
இச் செயல்திட்டம் தென்மராட்சி பிரதேசசபை தவிசாளர் வாமதேவன் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் உறுப்பினர்களான திரு.கலைஅமுதன், திரு.சுதர்சன், மற்றும் லவ்லி கிறீம் கவுஸ் முகாமையாளர்களான லோசன், புவிராச் ஆகியோரால் செயல்படுத்தப்பட்டது.
இந்தச் செயல்திட்டமானது வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்துப் பிரதேசங்களிலும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதனையும், உங்கள் பிரதேசங்களில் செயற்படுத்தப்படும் போது அனைவரும் எம்முடன் இணைந்து இச் செயற்திட்டத்திற்கு உங்கள் முழுமையான ஆதரவினையும், பங்களிப்பினையும் தந்து உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.