கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது !

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 697 பேரில் 357 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.

அதன் படி மட்டக்குளி பகுதியில் 128 பேர் , பொரளை பகுதி யில் 110 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 219 பேர் நேற்றைய தினம் அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

மஹர பகுதியில் 55 பேர் மற்றும் கட்டு நாயக்க பகுதியில் 54 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 38 பேர், அம்பாறை மாவட்டத்தில் 25 பேர், களுத்துறை மாவட்டத்தில் 16 பேர், புத்தளம் மாவட் டத்தில் 16 பேர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 10 பேர் மற்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் உட்பட கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடை யாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.