கல்முனை ரொட்டறிக்கழகத்தினால் நூல் தொகுதி நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு வழங்கல்

அமெரிக்க ரோட்டறிக்கழகத்தினால் இலங்கை ரோட்டறிக்கழகம் ஊடாக கப்பலில் ஒன்றின்  மூலம் புத்தகம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது கல்முனை ரோட்டறிக்கழகம் மூலம் பிரதேச செயலகங்களுக்கு கீழ் உள்ள நூலகங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

இச்செயற்திட்டத்திற்கு அமைய நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு தொகுதி நூல்கள் வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இன்று(11) இடம்பெற்றது.

இதன் போது குறித்த நூல் தொகுதியை நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் என்.நவனீதராஜாவிடம் கல்முனை ரொட்டறிக்கழக தலைவர் ரொட்டேறியன் கே.குகதர்சன் செயலாளர் ரோட்டேறியன் பி.எச.எப்.சிவபாதசுந்தரம் உள்ளிட்ட குழுவினர் வழங்கி வைத்தனர்.

குறித்த நூல் தொகுதி பல்லாயிரம் ரூபா பெறுமதியானவை என்பதுடன் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்படவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.