கோவிட் -19 தொற்று காரணமாக வவுனியா -புதிய சாலம்பைக்குளம் கிராமம் முடக்கம்

வவுனியா புதிய சாலம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந் நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையின் முடிவு நேற்றையதினம் (11.12) வெளியாகிய நிலையில் தாயுக்கும் பிள்ளைக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு கோவிட் -19 தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் முகமாக புதிய சாலம்பைக்குளம் கிராமம் இன்று (12.12)  சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட அக்கிராமத்தினை சேர்ந்த 40க்கு மேற்பட்ட மக்களிடம் சுகாதார பிரிவினர் இன்றையதினம் (12.12) பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொண்டனர்.

புதிய சாலம்பைக்குளத்தினை சேர்ந்த 28வயதுடைய தாயும் அவரது 5வயதுடைய மகளுமே இவ்வாறு கோவிட் – 19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களாவர்கள் அவர்களை தொற்று சிகிச்சை மையத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.