மேலும் 515 பேருக்கு கொரோனா
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 515 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்த 147 பேர் மற்றும், பேலியகொடை கொரோனா கொத்தணியை சேர்ந்த 368 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 650 ஆக உயர்வடைந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை