(குச்சவெளி பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் 6 பேர் கைது

திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடலிக்குளம்  காட்டு பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஆறு  பேரை கைதுசெய்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குருநாகல், மாத்தறை, மற்றும் குச்சவெளி பகுதிகளைச் சேர்ந்த 26, 27, 45,52 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குச்சவெளி வடலிக்குளம் காட்டுப்பகுதியில் இனந்தெரியாதோர் காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் அவர்களை கைது செய்ததாகவும் அவர்களிடமிருந்து சில பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 6 பேரில் ஒருவர் தொல்பொருள் திணைக்களத்தின் கடமையாற்றி வருபவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றில் நாளை திங்கட்கிழமை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.