இஸ்லாமியர்களின் ஜனாசாக்களை எரிக்காது அடக்கம் செய்யக்கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச செயலகத்திற்கு முன்னர் கவன ஈர்ப்பு போராட்டம்…

இஸ்லாமியர்களின் ஜனாசாக்களை எரிக்காது அடக்கம் செய்யக்கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச செயலகத்திற்கு முன்னர் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற குறித்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களை சேர்ந்தவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பூநகரி பிரதேச செயலகம் முன்பாக கவனஈர்ப்பு பதாதை (பெனர்) காட்சிப்படுத்தப்பட்டது.
உலக நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது போன்று இஸ்லாமிய சமய முறைக்கமைவாக ஜனாசாவை எரிக்க வேண்டாம் எனவும், மத அனுஸ்டானங்களிற்கு ஏற்ற வகையில் அதனை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்து்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் குறித்த கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.