வடக்கு, கிழக்கு, வடமத்தி, வடமேல் ஆகிய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யலாம் !
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று 100 மில்லி மீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமென, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வடக்கு, கிழக்கு, வடமத்தி, வடமேல் ஆகிய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யலாமென திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏனைய பிரதேசங்களில் பி.ப 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை