நாடு முழுதும் மதுபான கடைகளை மூட கோரிக்கை!

எதிர்வரும் பண்டிகை நாட்களிலும் அதேபோல புதுவருடப் பிறப்பு தினத்திலும் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானக்கடைகளை மூடுவதற்கு அறிவிக்கும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது.

அரசாங்கம் இந்த தீர்மானத்திற்கு வராவிட்டால் பண்டிகை நாட்களிலும், வருடப் பிறப்பிற்குப் பின்னரும் மேலும் பல கொரோனா தொற்றாளர்கள் உருவாகிவிடுவார்கள் என்றும் அந்த சங்கத்தின் பணிப்பாளரான டாக்டர் ஹரித்த அலுத்கே கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.