அனைத்து மதுபானசாலைகளையும் நாளைய தினம் மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் நாளைய தினம் மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நத்தார் பண்டிகை தினத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளது.

மேலும், பண்டிகைகாலத்தில் சட்டவிரோதமாக பதுபான விற்பனையில் ஈடுப்படும் நபர்களை கைது செய்யவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கென மதுவரித்திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்க்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.