மஹர சிறைச்சாலை சம்பவம் : நீதி அமைச்சரிடம் இறுதி அறிக்கை கையளிப்பு!

மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விடயங்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு அதன் இறுதி அறிக்கையை நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் கையளித்தது.

குழுவின் தலைவர் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி குஸலா சரோஜினி வீரவர்தன தலைமையில் இந்த அறிக்கை நேற்று (30) கையளிக்கப்பட்டது. நீதி அமைச்சர் இந்தக் குழுவை கடந்த மாதம் 29ஆம் திகதி (2020.11.29) நியமித்தார்.

குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த 7ஆம் திகதி (2020.12.07) கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்குள் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இந்தக் குழுவிற்கு பணிப்புரை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.